Sunday, December 17, 2023

'கிருமி கதைகள்' வெளியீடு


 




கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் 'கிருமி கதைகள்' மொழியாக்கத் தொகுப்பு தயாராகிவிட்டது. ஒன்றரை வருடங்களாகத் தேடித் தேர்ந்து நிதானமாக மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் இவை. நான்கு கதைகளைத் தவிர மற்றனைத்தும் மின்னிதழ்களில் வெளியாகி பரவலாக வாசிக்கப்பட்டவை. 'யாவரும்' ஜீவ கரிகாலன் இத்தொகுப்பிற்காக நீண்ட காலம் காத்திருந்தார். இத்தொகுப்பிற்கான எதிர்பார்ப்பிலும் வெளியிடும் ஆர்வத்திலும் திளைத்த முதலாமவர் அவர்தான். 


விஷ்ணபுரம் விருது விழாவில் இந்நூலினை வெளியிடும் நல்வாய்ப்பு அமைந்தது. ஆசான் ஜெயமோகன் முன்னிலையில் என் பெருமதிப்பிற்கும் அணுக்கதிற்கும் உரிய எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வெளியிட, எனதருமை அண்ணன் கடலூர் சீனு பெற்றுக்கொண்டார். எட்கர் ஆலன் போ வின் சிறுகதையின் தமிழாக்கம் வெளிவந்தவுடன் வாசித்து கருத்துகளை பகிர்ந்த முதல் வாசகர் அவர். இவ்வரிசைக் கதைகளுக்கான தொடக்கமும் அதுதான். 


உடன், நண்பர் சுஷீல்குமாரின் முதல் நாவலான சுந்தவனமும் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை தொகுப்பான நின்றெரியும் சுடரும் வெளியிடப்பட்டன. 


ஆசான் ஜெயமோகனின் இந்நிகழ்வு குறித்த பதிவு - https://www.jeyamohan.in/194787/


இருநூறு ஆண்டுகளில் பெருந்தொற்றை மையப்படுத்திய சிறுகதைகளின் வடிவத்தையும் அழகியல் மாற்றங்களையும் இத்தொகுப்பு ஒரு துளி சித்திரமென அளிக்கும் என நம்புகிறேன்.    

No comments:

Post a Comment